Friday, September 5, 2008

எங்கும் தனிமை எதிலும் தனிமை

பள்ளி பருவத்திலிருந்தே நல்ல நண்பர்கள் இல்லாமல் தனியாகவே என் வாழ்க்கை இருக்கிறது. பத்தாம் வகுப்பிலிருந்து தான் எனக்கு இரண்டு நண்பர்கள் கிடைத்தார்கள் ஒருவன் பிரதீப் இன்னொருவன் பிரபின். ஆக எனக்கு இரண்டே இரண்டு நல்ல நண்பர்கள் தான். ஆனால் நான் இப்பொழுது சென்னையில் இருக்கிறேன். பிரதீப் ராணுவத்தில் இருக்கிறான். பிரபின் B.Tech படித்து கொண்டிருகிறான். எனவே மீண்டும் என் வாழ்வில் தனிமை ஆரம்பமானது. தற்போது என் அறையில் ஒரு நண்பன் இருக்கிறான் ஆனாலும் பழைய நண்பர்கள் அளவில் மனதிற்கு ஒத்து வரவில்லை.
என் மனதிற்கு சிறிது ஆறுதல் தருவது வலைபூக்கள் வாசிப்பது தான்,ஆக எனக்குள் பதிவு போட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இது என் தனிமைக்கு சிறிது ஆறுதல் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் பதிவையும் யார் மதித்து படிப்பார்கள் என்ற எண்ணமும் இல்லாமல் இல்லை. ஆசை யாரை விட்டது.
பதிவுலக நண்பர்கள் யாரவது கிடைபார்கள என்று பார்போம்......

2 comments:

Anonymous said...

வலைப்பதிவுலகிற்கு நல்வரவு கண்ணன்.
//ஆனாலும் பழைய நண்பர்கள் அளவில் மனதிற்கு ஒத்து வரவில்லை//
நீங்கள் சொல்வது உண்மை. எல்லோருக்கும் இப்பிரச்சினை உண்டு. கவலைப்படாதீர்கள். வலைப்பதிவுலகு உங்கள் தனிமையை போக்கும்.

மோகன்

நிழல் said...

thanks Mohan