Friday, September 5, 2008

கணினியும் நானும்

1998 முதல் நான் கணினி உபயோக படுத்துகிறேன். எங்கள் ஊரில் அப்பொழுது தன் முதன் முதலாக ஒரு கணினி பயிற்றுவிக்கும் நிலையம் வந்திருந்தது. வீட்டில் சொல்லி ஒரு வழியாக முதல் அணியில் சேர்ந்து விட்டேன். முதல் ஒரு வாரம் கணினியை கண்ணிலே காட்டவில்லை. என்னடா நம்ம வேற வீட்டுலயும் , ஸ்கூல் யும் கணினி படிக்க போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம் இங்க என்னடான்ன எதையுமே கண்ணுல கூட காட்டல. சரி போகட்டும் ஒரு மேடம் தன் வகுப்புகள் நடத்தியது. நமக்கு அப்பவே கூச்ச சுபாவம் அதிகம் அதனால எதுவும் கேக்கல.  
நம்ம பாட்டுக்கு அவங்க எழுதி போடுறதா நோட்ல எழுதிகிட்டு வீட்டுக்கு போறது. அப்படி ஒரு வாரம் போயாச்சு...... அப்போ வகுப்புல நான் தான் சின்ன பையன். வேற எல்லாரும் பெரிய பசங்க பொண்ணுங்க, அதனால அடக்கமா உக்கார்ந்து படிக்க வேண்டியது தான். ஒரு வாரம் கழிச்சு ஒரு சார் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க மெதுவா அவங்க டைம்கு எஸ்கேப். அவரு முதல் நாளே கம்ப்யூட்டர்ல உக்கார வச்சாங்க. அப்போ எவளோ சந்தோசம் தெரியுமா . கருப்பு வெள்ளை கணினி, விண்டோஸ் இயங்கு தளம் . கொஞ்சம் கொஞ்சமா படிக்க தான் போறோம்னு நினச்சா அவரு நம்மள விட பெரிய ஆளு கேம்ஸ் போட்டு காட்டி விளையாடு ன்னு விட்டுட்டாரு. ஆஹா நல்ல ஒரு வாத்தியாரு கிடைத்திருக்கிர்றார் ன்னு சந்தோசம். ஆனா அது ரொம்ப நாளைக்கு நிலைக்கல என்ன ஆறு மாச கோர்ஸ் நாங்க கேம்ஸ் விளையாடி விளையாடி தொங்கிட்டு இருந்துது. அப்புறம் என்ன ரொம்ப ஸ்பீடா கோர்ஸ் முடிச்சிட்டார். நானும் வருத்தத்தோட விடை பெற்றேன் அந்த கல்வி நிலையத்தில் இருந்து. அப்புறம் 2000 இல் பள்ளியில் கணினி பாடம் வந்தது. அப்போது நம்ம தான் கிளாஸ்ல கணினி தெரிந்த ஒரே ஆள். அப்புறம் அலம்பலுக்கு கேக்கனுமாஎன்ன.......
சக மாணவர்களை விட என்னிடம் நல்ல அன்பாக இருந்தார் கணினி ஆசிரியை, அவங்க கிளாஸ் வந்தாலே ஒரே குஷி தான் போங்க. ஆனா ஒரே பிரச்சினை என்னன்னா ரெண்டே ரெண்டு கணினி தான் நாங்க பேரு ஒரு வகுப்புல அதனால லேப் தான் பிரச்சினை. அப்படியே ஒரு வருஷம் போயிரிச்சு. ஆனாலும் அந்த ஸ்கூல் வாழ்க்கைல மறக்க முடியாத இடம். அப்புறம் மேல்நிலை படிப்புக்கு தக்கலை ஸ்கூல் போயி அது பெரிய காமெடி ஆயி போச்சு..... சரி ஸ்கூல் லைப் பத்தி தனி பதிவா போடுவோம் . அப்புறம் ஸ்கூல் முடிச்சு நாகர்கோயில்ல ஒரு சென்டர் ல மீண்டும் கணினி படிப்பு அப்புறம் ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனதில் வேலை கிடைத்தது. நெட்வொர்க் அட்மின் வேலை. அப்படியே படித்து, படித்து இப்போதும் கணினி படித்து கொண்டுதான் இருக்கிறேன். தீராத காதல் கணினி மீது...... அதனால் தானோ என்னவோ சாப்பிட கூட போகாமல் இப்படி டைப் பண்ணி கொண்டே இருக்கிறேன். அலுவலகத்தில் மடிகணினி வழங்கி இருக்கிறார்கள். இருபத்திநாலு மணிநேரம் பத்த மாட்டேங்குது சும்மா எதாவது பண்ணி கிட்டே இருக்கணும்...................... அனா ஒன்னு அன்னைக்கு நிறுத்தினது தான் கணினியில் கேம்ஸ் விளையாடுறது . இப்போ சுத்தமா விருப்பம் இல்ல ........ சென்னை வந்ததில் இருந்து ஒரே போர். என்ன செய்ய இப்படியே மொக்க பதிவா போட்டு மக்களோட கழுத்து அறுக்க வேண்டியது தான்.. என்னுடைய பதிவையும் மதிச்சு பின்னூடங்கள் போட்ட மோஹனுக்கு நன்றி..


No comments: