Saturday, September 6, 2008

தொடர்ச்சி...........

இவனெல்லாம் தொடர் பதிவு போடுறானே நீங்க நினைக்கலாம்... என்ன செய்ய..............
 ஒன்பதாம் வகுப்பில் தான் பசங்களும் பொண்ணுங்களுமா படிக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில கூச்சமா தான் இருந்துது. அப்புறம் பழகிரிச்சு.
அப்புறம் என்ன.......... வழக்கம் போல வகுப்பறை சண்டைகள் தான். எங்களது கணித ஆசிரியைக்கு கண் பார்வை அவ்வளவு தெரியாது. அவங்கள விளையாட்டு காட்டுறதே ஒரு வேலையா போச்சு. அப்புறம் பத்தாம் வகுப்பு.ரொம்ப சீரியஸ் இல்லையென்றாலும் சீரியஸ் ஆக சென்றது. ஒன்பதாம் வகுப்பு விடுமுறையின் போதே வகுப்புகள் ஆரம்பித்தது.
தினமும் மதியம் வரை........... ரொம்ப கடுப்பாக இருக்கும், காலையில் இருந்து மதியம் வரை ஒரே பாடம் தான் அறுவை.... ஒரு புது கணித ஆசிரியை அவங்க கிளாஸ் கொஞ்சம் நன்றாக தான் இருந்தது. எங்கள் தமிழ் ஆசிரியை தான் வகுப்பு ஆசிரியை, அவங்க எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லா பேசுவாங்க, ஆனா வீட்டுல இருந்து யாரவது வந்தா போட்டு குடுத்துருவாங்க, ஆனாலும் நல்ல தான் சொல்வாங்க. அப்படி ஒரு வழியா அந்த ஸ்கூல் படிப்பும் முடிசிட்டு, டிப்ளோமோ செல்லலாம் என்று இருந்தேன்.வழக்கம் போல வீட்டுல ஆப்பு வச்சிடாங்க, மேல்நிலை படிப்பு முடிசிட்டு போகலாம் என்று , அப்ப்புறம் என்ன விதியேன்னு அந்த ஸ்கூல்லயே படின்னாங்க. நம்ம யாரு டிப்ளோமா அப்பளை பண்ணிக்கிட்டு , அப்படியே மேல்நிலையில் காமெர்ஸ் குரூப் அப்பளை பண்ணினேன், சரி காமெர்ஸ் குரூப்ன்னா நம்மள டிப்ளோமா விடுவாங்களேன்னு, ஆனாலும் விதி சதி செய்து, வேற ஒரு ஸ்கூல்ல சேர்த்து விட்டுடாங்க. கணித குரூப், அங்க ஸ்கூல்க்கு போன நாளவிட கட் அடிச்சு படத்துக்கு போன நாட்கள் தான் அதிகம்.
ஆனா நம்ம கட் அடிக்கிற நாள் பார்த்து வீட்டுல இருந்து யாரவது ஸ்கூல்க்கு வருவாங்க அது எப்படின்னு தான் இன்னைக்கு வரைக்கும் புரியாதா புதிர்........... அப்புறம் ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு அந்த ஸ்கூல்ல ஒட்டியிருக்கேன். அங்க மனசுல எந்த ஆசிரியரும் ஓட்டலை( ஸ்கூல்க்கு போனதனே தெரியும்னு சொல்றது தெரியுது )............. அப்படி பள்ளி வாழ்கை முடிஞ்சுது. நான் படிச்சா மூணு ஸ்கூல்ல மொத ரெண்டு ஸ்கூல்ல என்ன பத்தி கேட்டா ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க, ஆனா கடைசி ஸ்கூல் இருக்கே அங்கே பாதி பேருக்கு என்னை தெரியவே செய்யாது. ஆனா அங்க தான் நான் பல விஷயங்கள் புரிஞ்சுகிட்டேன். ஒரு சில கூடா நட்புகளின் காரணமாகா நான் பட்ட அவஸ்தைகளும் அதிகம். இன்னும் சொல்ல வேண்டுமானால் நண்பர்களை பற்றி புரிந்து கொண்டேன். என்றைக்கும் அவங்க ரெண்டு நண்பர்கள் தான் எனக்கு துணையாக இருகிறார்கள்.  
இன்று வரைக்கும்................................... மீண்டும் பள்ளி நாட்கள் வருமா என்ற ஏக்கம் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.


No comments: