Tuesday, September 9, 2008

மதவாதம் எனது பார்வையில்

இன்றைய அரசியல் கட்சிகள் எதெற்கெடுத்தாலும் மதவாதம் மதவாதம் என்று கூறுகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் உண்மையிலே மத சார்பற்றவர்கள். பா.ஜ.க. மதவாத கட்சி என்கிறார்கள், என்னுடைய பார்வையில் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகள் தான் மதவாத போர்வையில் தங்களை போர்த்தி கொண்டுள்ளன. ஹிந்து மதத்தில் உள்ளவர்கள் இஸ்லாமியனால் தாக்கபட்டல்ல்லும், அவர்களுடைய வழிபாட்டு இடங்களில் வெடி குண்டு வைத்தாலும் இங்கு கண்டனம் தெரிவிக்கவோ, அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவோ எந்த அரசியல் கட்சியும் முன்வருவதில்லை. ஆனால் ஒரு இஸ்லாமியன் கையை அவனே ஒரு ஒரு கத்தியை வைத்து கிழித்தாலும், எல்லா அரசியல் கட்சியினரும் ஆர்பாட்டம் , மறியல் என நாட்டயே நடுங்க வைத்து விடுவார்கள். ஒரு இந்து கடவுளை நிர்வாணமாக படம் வரைந்தால் அது கலையாம், அதே அவர்கள் நபியை கார்டூனாக வரைந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாம், கார்டூன் வரைவது கலை இல்லையா?, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டுமாம். அவர்கள் என்ன இஸ்லாமிய வழிபாட்டு இடங்களில் வெடிகுண்டு வைத்தார்களா? இல்லை இஸ்லாமியர்களை கொன்று குவிதார்களா? நாடு முழுவதும் வெடி குண்டு வைக்கும் சிமி அமைப்பை தடை செய்ய கூடாதாம்? என்ன கொடுமை இது? பா.ஜ.க இந்து மதவாத கட்சி என்றால் மற்றவர்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவாத கட்சிகள் தாம். இங்கு போலி மத சார்பின்மை பேசாத ஒரே ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. இந்தியாவை துண்டாட நினைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போவது மதவாதமா, அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வர நினைக்கும் பா.ஜ.க பயங்கரவாத கட்சியா?. அடுத்து தமிழக பகுத்தறிவுவாதிகள் , ஹிந்து அமைப்புகளையும், இந்து கடவுள்களையும் விமர்சிக்கும் இவர்களுக்கு, இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க தைரியம் உண்டா? விமர்சிக்க என்ன எதிராக ஒரு கருத்தை சொன்னாலே கிழித்து விடுவார்கள். ஆனால் இந்துவை பற்றி என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்டான், சரியான இளிச்சவாயன் என்று புரிந்து வைத்திருகிறார்கள். பாபாஜி ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால், கிண்டலடிப்பவர்கள், இறந்த பின்பு ஒருவர் உயிர்தெழுந்தார் என்று சொன்னால் நம்புவார்களாம். என்ன கொடுமை இது? தலைவர் ஒருவர் ஒரு விழாவில் கூறினார் என்னை துரோணர் என்று கூறாதிர்கள் என்று, அன்று துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சிணையாக வாங்கினார், இன்றோ அவர் தன் வாரிசு அரசியலில் மாறன் பிரச்சினையாக வருவார் என அவருடைய அரசியல் வாழ்கையயே பறித்து விட்டார். நீங்களே சொல்லுங்கள் துரோணர் என்ற வார்த்தைக்கு அவர் தகுதியனவாரா இல்லையா என்று? தனிமனித விமர்சனத்தை என்றுமே நான் விரும்பியதில்லை, வேறு ஒரு கவிஞர் கவிதை எழுதி இருந்தார், கர்நாடகத்தில் இருந்ப்பவனும் ஹிந்து, தமிழகத்தில் இருப்பவனும் ஹிந்து, ஒரு ஹிந்துவுக்கு ஹிந்து தண்ணீர் தரமாட்டானா என்று? எனக்கு ஒரு சந்தேகம், கர்நாடகத்தில் ஹிந்து மட்டும் தான் இருக்கிறானா? இல்லை ஹிந்து மட்டும் தான் தண்ணீர் தரமாட்டேன் என்று சொன்னனா? இல்லை இங்கு ஹிந்து மட்டும் தான் தண்ணீர் கேட்டானா?.... இங்கு வேறு எந்த மதத்தில் இருப்பவர்களுக்கும் தண்ணீர் தேவை இல்லையா ? அது என்ன என்ன பிரச்சினை என்றாலும் ஹிந்துவை இழுப்பது? அப்புறம் ஒரு பகுத்தறிவு தொலைக்காட்சி விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கினார்களாம். ஏன் ஞாயிற்று கிழமை கூட விடுமுறை தானே, அப்பொழுது ஞாயிற்று கிழமைகளிலும் விடுமுறையை முன்னிட்டு என்று சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்க வேண்டியது தானே? அதை செய்ய வேண்டியது தானே? ஏன் ஹிந்து விழாவை வைத்து பணம் மட்டும் சம்பாதிக்கலாம், அதை வெளியே சொல்ல கூடாதாம். என்ன ஒரு பகுத்தறிவு? தன் வீட்டில் உள்ளவர்களுக்கு பகுத்தறிவு சொல்லிதர இயலாதவர்களுக்கு பகுத்தறிவுக்கான விருதாம்? என்ன கொடுமை இது....... நம் நாட்டை பொறுத்த வரைக்கும் இந்துவை எதிர்ப்பது தான் மதசார்பின்மை, சிந்தியுங்கள்...........

No comments: